Saturday, December 15, 2007

தனிமை கொடுமை

இளமையில் தனிமை கொடுமை
இளைஞர்கள் பலருக்கு இன்று
இதுவே நிலைமை
இவ்வாழ்கையில் வெறுமை உண்மை
நானும் அவர்க்ளுள் ஒன்று
என்பதோர் உவமை

பெற்றோர் உற்றார் விட்டு
ஊரும் மக்களும் அறியா
வேலை நிமித்தமிட்டு
மட்டற்று, ஊனுறக்கம் கெட்டு
வேறு போக்கற்று சிறையாய்
வாழ்க்கை தறிகெட்டு

நாளும் பொழுதும் ஊமையாய்
நான்கு சுவர்கள் மட்டுமே
இருக்கும் நன்பனாய்
மடியில் கனினியே குழந்தையாய்
வலையில் உரையாடி மகிழ்வோமே
வாழ்க்கை போலியாய்

உற்றோர் கேட்குறல் இல்லை
நன்பர்களுடன் கூட பொழுதில்லை
தொழிலே பிரதானமாய்
தாய்மொழி பேசவாய் பில்லை
அவர் மொழியும் அறியவில்லை
வாயிருந்தும் ஊமையாய்

மனம் தரும் உணவில்லை
கேட்டு பரிமாற தாயில்லை
ஏதோ பசியாற்றி
சின்னஞ்சிறு சண்டையில்லை
தலைசாய்க்க மடியில்லை
எதோ பொழுதோட்டி

என்ன சாபமுற்ற வாழ்க்கை
ஏனிந்த வேண்டா வேட்க்கை
விடு, வருகிறேன்
குடும்பத்தோடு இனையும் வாய்ப்பு
மகிழ்வு மட்டுமே நினைப்பு
வீடு வருகிறேன்!

No comments: