Wednesday, December 26, 2007

அழகு பாகம் -1

எது அழகு? எவை அழகு?
நிரந்தரமற்றவை அழகு
அவரவர் கண்ணுக்கு ஒவ்வொன்றழகு
என்கண்களில் சில மாறுபட்ட அழகு!

கடைசியில் மகிழ்ச்சி தரும்
வெற்றிக்கு வித்தான உள்ளிருக்கும்
பயமழகு!

தன்னைதான் நிறுத்தி தலை
நிமிரச்செய்யும்-வந்த தோல்வியின்
அவமானமழகு!

இறக்கமற்று இரக்கம் கண்டு
எள்ளுவோரை ஏறிமிதிக்க -வந்த அவமானத்தின்
கோபமழகு!

அன்பின் அழுகை அழுத்தி
அகத்தில் ஆழ்ந்த அகழா காதலின்
தோல்வியழகு!

இரும்பான நெஞ்சங்கள் உருவாக
கரும்பான சிலர் பேச்சில் ஏமாந்த
வஞ்சங்களழகு!

யோசித்து பார்த்தால் உணரும்
அழியா பாடங்கள் தரும் இந்த
அவலங்களுமழகே!

No comments: